திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Saturday, March 30, 2019

திருப்பாலைக்குடியில் போர்வெல் அமைக்கும் பனி








தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின், SCERT (பள்ளிப் பாடங்கள் விடியோ வடிவில்)


இதை கிளிக் செய்யுகள் ⇓👇

TN SCERT


தமிழக அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும்,  SCERT க்கும் ஒரு வாழ்த்து சொல்லுங்க!

என்னான்னு கேக்குறீங்களா..  11-வது Chemistry,  Physics new bookல உள்ள கடினமான, முக்கியமான பகுதிகளை எல்லாம் எளிமையா, புரியும்படியா video lessons பண்ணிருக்காங்க.

sema work.  extraordinary plan.  conceptஐ விளக்கி சொல்லியிருக்காங்க.

English, தமிழ் ரெண்டு மொழியிலும் தயாரிக்கப் பட்டிருக்கு.

இந்தாப்பா... இனி ஆயிரக்கணக்குல செலவழிச்சு Tuition அனுப்ப வேண்டாம்.

வாத்தியார் இல்லன்னாலும் சரி, நடத்துனது புரியலனாலும் சரி இத ஒரு அஞ்சு தடவ பார்த்தாவே போதும், தெளிவா புரிஞ்சிரும்.

TN SCERT .. அப்பிடீங்ற  You Tube Channelல்ல எல்லாமே upload ஆயிருக்கு.

இப்ப என்ன பிரச்சனைனா இது பத்தி யாருக்குமே தெரியல.

freeyaa கிடைக்கிறதால யாருக்குமே இதன் அருமை தெரியல.

கிராமப்புற, ஏழைப் பிள்ளைங்களுக்கு இந்த விஷயம் போய்ச் சேரவேயில்லை.

ஏதாவது நல்லது செய்யனும்னு நினைச்சா இதப் பத்தி மாணவர்களுக்கு சொல்லி நல்லா படிக்க உதவுங்க.

தக்வா (இறையச்சம்) என்றால் என்ன? What’s Taqwa?

தக்வா (இறையச்சம்) என்றால் என்ன?
What’s Taqwa?

Taqwa is not only in our manners..
இறையச்சம் என்பது நம்முடைய செயலில் மட்டும் வெளிப்படுவது அல்ல.

Taqwa is not just about looking islamic…
இறையச்சம் என்பது இஸ்லாமின் அடிப்படையில் இவர் இருக்கிறாரா என்று பார்ப்பதில் மாத்திரம் இல்லை.

Taqwa is not about sporting a beard or wearing a Hijab…
இறையச்சம் என்பது தாடி வைப்பதிலும், பர்தா அணிவதிலும் மாத்திரமல்ல.

Taqwa is not appearance
இறையச்சம் என்பது தோற்றத்தை வைத்து தீர்மானிப்பதல்ல.

BUT
மாறாக

Taqwa is when you miss a single prayer, you feel uneasy the whole day…
இறையச்சம் என்பது ஒரு நேர தொழுகையை நீ விடும் போது,உன்னுடைய உள்ளத்தில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதில் உள்ளது.

Taqwa is when you speak a lie , your instinct feels bad..
இறையச்சம் என்பது நீ ஒரு பொய் சொல்லும்போது உன் உள்ளத்தை உருட்டுவதில் உள்ளது.

Taqwa is the guilt that follows when u hurt someone knowingly or unknowingly.
இறையச்சம் என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒருவரை நீ புண்படுத்தியிருந்தால் உன் உள்ளம் துன்பப்படுவதில் உள்ளது.

Taqwa is the shame and regret that follows a sin you did knowing fully well about it’s stand in the sight of Allah,
இறையச்சம் என்பது அல்லாஹ் தடுத்த பாவமான காரியத்தை செய்தால், அல்லாஹ்விற்கு முன்பாக நிற்க வேண்டுமே என்ற அச்சத்தில் வெட்கப்படுவதில் உள்ளது.

Taqwa is when you cannot sleep the whole night after disobeying or disrespecting your parents
இறையச்சம் என்பது உன் பெற்றோருக்கு மாறு செய்து விட்டால் இரவில் தூங்க முடியாமல் வேதனைப்படுவதில் உள்ளது.

Taqwa is to cry in the depths of night fearing none but the one above the Arsh.
இறையச்சம் என்பது இரவில் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் கண்ணீர் சிந்துவதில் உள்ளது.

Taqwa is the fear that refrains us from sinning even when we are alone and nobody is looking…
இறையச்சம் என்பது வெளிப்படையான, அந்தரங்கமான வாழ்க்கையில் யார் என்னைப் பார்க்கவில்லை என்றாலும் அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான்,என்று அஞ்சி பாவம் செய்யாமல் வாழ்வதில் உள்ளது.

Taqwa is the guts and the will to please Allah, even when the whole world is hell bent on displeasing Him…
இறையச்சம் என்பது உலகமே பாவத்தின் பக்கம் அழைத்தாலும், அல்லாஹ்விற்காக பாவங்களை விட்டு விலக கூடிய துணிவில் உள்ளது.

Taqwa is to wear that beard and Hijab for the sole reason of pleasing Our Creator and to keep it as per sunnah….
இறையச்சம் என்பது தாடி வைப்பதும் பர்தா அணிவதும் என் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு மட்டும் தான் இதை செய்கிறேன் என்பதில் உள்ளது.

Taqwa is to stay happy and smiling even after knowing this world is a prison for believers…
இறையச்சம் என்பது இந்த உலகம் இறைவிசுவாசிகளுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும் என்று தெரிந்தும் புன்னகையுடனும், சந்தோஷத்துடன் வாழ்வதில் உள்ளது.

Taqwa is the good manners and character that loving and fearing Allah brings in us…
இறையச்சம் என்பது நல்ல பண்புகளையும், நற்குணத்தையும், மனிதர்களை நேசிக்கின்ற சுபாவம் போன்ற நற்செயல்களில் உள்ளது.

Taqwa is the struggle to better yourself according to Islam with each passing day…
இறையச்சம் ஒவ்வொரு நாளையும் இஸ்லாம் உனக்கு கற்றுத் தந்த ஒழுகத்தில் வாழ்வதில் உள்ளது.

Taqwa IS ALL ABOUT WHAT LIES IN THE HEART.
இறையச்சம் உன் உள்ளம் ஒரு பாவமான காரியத்தை தவறு என்று உணர்த்துவதில் உள்ளது.

And if this heart is filled with proper Taqwa, then actions automatically follow…
இறையச்சம் உன் உள்ளத்தை தூய்மை படுத்திவிட்டால் உன் முழு வாழ்க்கையும் தூய்மையாகி விடும் இன்ஷா அல்லாஹ்..

And the sweetness of these actions is so much better..
இறையச்சம் என்பதை தெளிவாக உணரும்போது தான் அதன் சுவையை உணரமுடியும்.

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ

அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.

திருக்குர்ஆன் 51:55

சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள்

நம் அன்றாட தேவைக்காக பயன்படும்  சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....

 1. PAN Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: பான் கார்டு

2.Passport Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: பாஸ்போர்ட்

3. Passport Renewal செய்வது எப்படி?
link: பாஸ்போர்ட்

4.Driving Licence Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link:ஓட்டுனர் உரிமம்

5.Smart  Ration Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: குடும்ப அட்டை

6.OBC Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link:இசேவைகள்

7.Community certificate Online-ல் Apply செய்து பெறுவது  எப்படி?
Link:இ சேவைகள்

8.Income Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: இ சேவைகள்

9.Nativity Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: இ சேவைகள்

10.First gradation Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link:இ சேவைகள்

11.Aadhar Card Online-ல் Download செய்வது எப்படி?
link: ஆதார் அட்டை

12.Birth Certificate Online-ல் Apply செய்து பொறுவது எப்படி?
link: பிறப்பு சாண்றிதல்

13.court judgment order copy Online-ல் Apply செய்து பெறுவது எப்படி?
link: கோர்ட்

14.Death Certificate Online-ல் Download செய்வது எப்படி?
link: இறப்பு சாண்றிதல்

15.Voter ID Online-ல் Apply செய்து பெறுவது எப்படி?
link:வோட்டர் ஐடி

16.Voter ID Online-ல் Download செய்வது எப்படி?
link:வொட்டர் ஐடி

17. PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என செக் செய்வது எப்படி?
link: வைப்பு நிதி

18. IT Return File செய்வது எப்படி?
link: வருமான வரி

19.TDS pay செய்வது எப்படி?
link வருமான வரி

20.முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் எவ்வளவு உள்ளது என check செய்வது எப்படி?
link: காப்பீடு

இது உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் சொந்தங்களும் உங்கள் நண்பர்களுக்கும் உதவும் Share செய்யவும்.

தொழக்கூடாத பத்து இடங்கள்

தொழக்கூடாத பத்து இடங்கள்

1. அடக்கஸ்தலம்

அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்)

2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட உருவப்படங்கள் உள்ள ஓர் ஆலயம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்”. அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: “அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்தால் அவரது கப்ரின் மீது அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவார்கள். அதிலே அவரின் உருவப்படங்களை அமைப்பார்கள். மறுமை நாளில் அவர்களே அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள்”. என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

3. ஒட்டகம் கட்டும் இடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!” (அஹ்மத்)

4. மலசலகூடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர”. (இப்னு ஹிப்பான்)

5. ஷைத்தான் ஒதுங்கும் இடங்கள்

மோசமான இடங்கள், காபிர்களின் ஆலயங்கள் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் விழிக்கவில்லை. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘ஒவ்வொருவரும் தனது வாகனத்தின் – கால்நடை – தலையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தை விட்டும் செல்லட்டும்! ஏனெனில், இந்த இடத்தில் ஷைத்தான் நம்மிடம் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வுழூச் செய்து கொண்டார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட பஜ்ர் தொழுவித்தார்கள்”. (முஸ்லிம்)

6. அபகரிக்கப்பட்ட பூமி

அபகரிக்கப்பட்ட பூமியில் தொழக்கூடாது என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என்
[7/31, 10:44 PM] Salman Tntj I Cad: பதை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

7. குபா பள்ளிவாசலுக்கு அருகில் காணப்பட்டு வந்த “ளிரார்” என்ற பள்ளிவாசல் மற்றும், (இப்பள்ளிவாசலைப் போன்று) தீங்கு விளைவிக்கும் நோக்கிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணும் நோக்கிலும் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களோ அவர்கள் (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை’ என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று சாட்சி கூறுகின்றான்”. (அத்தவ்பா: 107)

8. பூமி அதிர்வு போன்ற அல்லாஹ்வின் வேதனை இறங்கிய இடங்கள்

பொதுவாக இந்த இடங்களில் நுழைய முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற போது: “அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்!” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். (புஹாரி)

9. மஃமூம்களை விட உயரமாக ஓர் இடத்தில் இமாம் நின்று தொழுதல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃமூம்கள் பின்னால் தாழ்வான இடத்தில் இருக்க, இமாம் உயரமான ஒன்றின் மீது நின்று தொழுவதைத் தடை செய்தார்கள். (தாரகுத்னி, ஹாகிம்)

10. தூண்களுக்கு மத்தியில் மஃமூம்கள் வரிசையாக நின்று தொழுதல்

அப்துல் ஹமீத் இப்னு மஹ்மூத் என்பவர் கூறுகிறார்: “நாம் ஒரு தலைவருக்குப் பின்னால் மஃமூம்களாகத் தொழுதோம். மனிதர்கள் எம்மை நெருக்கடிக்கு ஆளாக்கினர். எனவே, நாம் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுதோம். அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு எம்மை விட்டும் பின்வாங்கி விட்டார். நாம் தொழுது முடித்தபோது அவர்கள்: ‘தூண்களுக்கு மத்தியில் தொழும் இச்செயலை நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் பயப்படக்கூடியவர்களாக இருந்தோம்’ என்று கூறினார்”. (நஸாஈ, திர்மிதி, அல்ஹாகிம், அஹ்மத்)