திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Saturday, March 30, 2019

தக்வா (இறையச்சம்) என்றால் என்ன? What’s Taqwa?

தக்வா (இறையச்சம்) என்றால் என்ன?
What’s Taqwa?

Taqwa is not only in our manners..
இறையச்சம் என்பது நம்முடைய செயலில் மட்டும் வெளிப்படுவது அல்ல.

Taqwa is not just about looking islamic…
இறையச்சம் என்பது இஸ்லாமின் அடிப்படையில் இவர் இருக்கிறாரா என்று பார்ப்பதில் மாத்திரம் இல்லை.

Taqwa is not about sporting a beard or wearing a Hijab…
இறையச்சம் என்பது தாடி வைப்பதிலும், பர்தா அணிவதிலும் மாத்திரமல்ல.

Taqwa is not appearance
இறையச்சம் என்பது தோற்றத்தை வைத்து தீர்மானிப்பதல்ல.

BUT
மாறாக

Taqwa is when you miss a single prayer, you feel uneasy the whole day…
இறையச்சம் என்பது ஒரு நேர தொழுகையை நீ விடும் போது,உன்னுடைய உள்ளத்தில் குற்ற உணர்வை ஏற்படுத்துவதில் உள்ளது.

Taqwa is when you speak a lie , your instinct feels bad..
இறையச்சம் என்பது நீ ஒரு பொய் சொல்லும்போது உன் உள்ளத்தை உருட்டுவதில் உள்ளது.

Taqwa is the guilt that follows when u hurt someone knowingly or unknowingly.
இறையச்சம் என்பது தெரிந்தோ தெரியாமலோ ஒருவரை நீ புண்படுத்தியிருந்தால் உன் உள்ளம் துன்பப்படுவதில் உள்ளது.

Taqwa is the shame and regret that follows a sin you did knowing fully well about it’s stand in the sight of Allah,
இறையச்சம் என்பது அல்லாஹ் தடுத்த பாவமான காரியத்தை செய்தால், அல்லாஹ்விற்கு முன்பாக நிற்க வேண்டுமே என்ற அச்சத்தில் வெட்கப்படுவதில் உள்ளது.

Taqwa is when you cannot sleep the whole night after disobeying or disrespecting your parents
இறையச்சம் என்பது உன் பெற்றோருக்கு மாறு செய்து விட்டால் இரவில் தூங்க முடியாமல் வேதனைப்படுவதில் உள்ளது.

Taqwa is to cry in the depths of night fearing none but the one above the Arsh.
இறையச்சம் என்பது இரவில் அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் கண்ணீர் சிந்துவதில் உள்ளது.

Taqwa is the fear that refrains us from sinning even when we are alone and nobody is looking…
இறையச்சம் என்பது வெளிப்படையான, அந்தரங்கமான வாழ்க்கையில் யார் என்னைப் பார்க்கவில்லை என்றாலும் அல்லாஹ் என்னை பார்த்துக் கொண்டிருக்கின்றான்,என்று அஞ்சி பாவம் செய்யாமல் வாழ்வதில் உள்ளது.

Taqwa is the guts and the will to please Allah, even when the whole world is hell bent on displeasing Him…
இறையச்சம் என்பது உலகமே பாவத்தின் பக்கம் அழைத்தாலும், அல்லாஹ்விற்காக பாவங்களை விட்டு விலக கூடிய துணிவில் உள்ளது.

Taqwa is to wear that beard and Hijab for the sole reason of pleasing Our Creator and to keep it as per sunnah….
இறையச்சம் என்பது தாடி வைப்பதும் பர்தா அணிவதும் என் இறைவனின் திருப்பொருத்தத்திற்கு மட்டும் தான் இதை செய்கிறேன் என்பதில் உள்ளது.

Taqwa is to stay happy and smiling even after knowing this world is a prison for believers…
இறையச்சம் என்பது இந்த உலகம் இறைவிசுவாசிகளுக்கு ஒரு சிறைச்சாலையைப் போன்றதாகும் என்று தெரிந்தும் புன்னகையுடனும், சந்தோஷத்துடன் வாழ்வதில் உள்ளது.

Taqwa is the good manners and character that loving and fearing Allah brings in us…
இறையச்சம் என்பது நல்ல பண்புகளையும், நற்குணத்தையும், மனிதர்களை நேசிக்கின்ற சுபாவம் போன்ற நற்செயல்களில் உள்ளது.

Taqwa is the struggle to better yourself according to Islam with each passing day…
இறையச்சம் ஒவ்வொரு நாளையும் இஸ்லாம் உனக்கு கற்றுத் தந்த ஒழுகத்தில் வாழ்வதில் உள்ளது.

Taqwa IS ALL ABOUT WHAT LIES IN THE HEART.
இறையச்சம் உன் உள்ளம் ஒரு பாவமான காரியத்தை தவறு என்று உணர்த்துவதில் உள்ளது.

And if this heart is filled with proper Taqwa, then actions automatically follow…
இறையச்சம் உன் உள்ளத்தை தூய்மை படுத்திவிட்டால் உன் முழு வாழ்க்கையும் தூய்மையாகி விடும் இன்ஷா அல்லாஹ்..

And the sweetness of these actions is so much better..
இறையச்சம் என்பதை தெளிவாக உணரும்போது தான் அதன் சுவையை உணரமுடியும்.

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنفَعُ الْمُؤْمِنِينَ

அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.

திருக்குர்ஆன் 51:55

No comments: